'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-09-30 17:34 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரியில் கச்சராயனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி இல்ைல என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது அந்த பள்ளி வளாகத்தில் புதிய குடிநீர் தொட்டி அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்