புதுக்கோட்டை நகர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக தூர்வரப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு நேரத்தில் இப்பகுதி மக்களை தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்கால்களை தூர் வாருவதுடன் மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.