வடிகால்கள் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-25 14:13 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் நடு செட்டி தெரு மற்றும் நடுத்தெரு சந்திக்கும் இடத்தில் சிறு மழை பெய்தாலும் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் மழைநீர் வடிந்து ஓடும் பாதையை அடைத்து சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது. இன்னும் சிறிது நாட்களில் மழைக்காலம் வர இருப்பதால் உரிய அதிகாரிகள் உடனடியாக அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்