அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

Update: 2022-09-25 13:41 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளி வகுப்பு பகுதியில் இருந்து மைதானத்திற்குள் நுழையும் பகுதியில் வேப்பமரம் ஒன்று உள்ளது. அந்த வேப்ப மரத்தில் கதண்டு கூடு ஒன்று உள்ளது. பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கதண்டுகள் கடித்தால் மாணவ-மாணவிகள் பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளதால் உரிய அதிகாரிகள் உடனடியாக அதனை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். 

மேலும் செய்திகள்