பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்படுமா ?

Update: 2022-09-24 15:36 GMT

அரியலூர் மாவட்டம் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து தினமும் பள்ளி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் அரியலூர் ,திருச்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இங்கு பெரும்பாலான இடங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சுக்காக பயணிகள் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் நனைந்தபடியே நிற்கின்றனர். சில சமயங்களில் மருத்துவமனை செல்லும் வயதான நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே பயணியர் நிழற்குடைகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்