முட்புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2022-09-18 13:40 GMT
  • whatsapp icon

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளி ராமநாதபுரம் காலனி பகுதியில் உள்ள சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அங்கு குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் சாலையும் பல ஆண்டுகளாக செப்பணிடாமல் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்வதோடு விபத்தில் சிக்குகின்றன. அதனால் தார் சாலை போடுவதோடு, முட்புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்