பள்ளி மாணவர்கள் அவதி

Update: 2022-09-17 13:28 GMT
அரியலூர் பெரியார் நகரில் உள்ள அரண்மனை தெரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாளசாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தவுடன் பள்ளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பெய்த மழையினால் மூடப்பட்ட பள்ளத்தில் மண்கள் உள்வாங்கிய நிலையில் ஆங்காங்கே மேடு பள்ளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள அரண்மனையின் முன்பு மழைநீர் அதிக அளவில் தேங்குவதினால் பள்ளி மாணவ-மாணவிகள் இருந்த வழியாக செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்