சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்

Update: 2022-09-17 12:17 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் தாலுகாவில் உள்ள 18-வது வார்டில் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் பரவும் சூழ்நிலையானது ஏற்பட்டு வருகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் மூலமாக மற்ற குழந்தைங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினை கொண்டு இப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்