அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக பொன்னேரி மற்றும் பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு கனரக லாரிகளில் எடுத்து வருகின்றனர். இந்த கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் மண்கள் , கனரக வாகனங்களுக்கு பின்னால் செல்லும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது மண் துகள்கள் கண்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கனரக வாகனங்களில் மண் எடுத்து செல்லும் லாரிகளில் தார்பா போட்டு மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.