சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியம் உடைகுளத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்களால் பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்ளின் மீது மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.