திருச்சி மாவட்டம், வயலூர் ரோடு எம்.எம். நகரின் முகப்பில் இருந்து உய்யகொண்டான் ஆற்றில் சேரும் மழைநீர் கால்வாய் ஆக்ரமிப்பால் தண்ணீர் செல்லும் வழியில் உள்ள இடம் மிகவும் இடைஇடையே மேடாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி எம்.எம்.நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.