கரூர் மாவட்டம், வேட்டமங்கலத்தில் இருந்து வடுகபட்டி மற்றும் ஆசாரிப்பட்டரை செல்லும் சாலையில் உள்ள புறம்போக்கு நிலங்களில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இந்த சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து முளைத்துள்ளதால் அருகில் உள்ள நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் வற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சீமைக் கருவேல மரத்தில் உள்ள காய்களை கால்நடைகள் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அருகில் உள்ள விளைநிலங்களில் எந்த பயிரும் முளைத்து வளர்ச்சி அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.