பழுதடைந்த அங்கன்வாடி மையம்

Update: 2022-09-12 14:16 GMT

திருச்சி தென்னூர் சங்கீதபுரம் ஆபிசர்ஸ் காலனியில் அங்கன்வாடி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கன்வாடி மையத்தில் கழிவறை வசதி இல்லை. மேலும் சமையல் அறையின் மேற்கூரை பழுதாகி உள்ளதால் மழைநீர் உள்ளே வருகிறது. மேலும் சமையல் அறையின் சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் உள்ளே வந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்