மூடப்பட்ட ரெயில் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை

Update: 2022-09-12 13:50 GMT

கரூர் மாவட்டம் நொய்யலில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே நிலையம் தொடங்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் திருச்சி, கரூர் மற்றும் ஈரோடு, கோவை, பாலக்காடு செல்லும் பயணிகள் ஏறி இறங்கி வந்தனர். இந்நிலையில் பயணிகள் ரெயிலில் ஏறி செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ரெயில் நிலையம் பூட்டப்பட்டது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்