தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-09-10 12:09 GMT

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம், தஞ்சை மெயின் ரோடு, சூலக்கரை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்து வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த பள்ளங்களை சரி செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்