கூடலூர் நகரில் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக செம்பாலா பகுதியில் கடந்த காலங்களில் சாலையோரம் சேரும் சகதியும் ஆக இருந்தது. இதனால் காலை மாலை நேரத்தில் மாணவ மாணவிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதைத் தடுக்க சாலையோரம் சிமெண்ட் நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது. இதனால் மாணவர்கள் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடைபாதையில் வாகனங்கள் நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யேசுராஜ், கூடலூர்
யேசுராஜ், கூடலூர்