கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் இருந்து திருக்காடுதுறை செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஆயத்த ஆடை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் கட்டிடம் பழுதடைந்து கட்டிடத்தின் மேற்கூரையில் மழைநீர் தேங்கி ஒழுகி வருவதன் காரணமாக அந்த கட்டிடம் பயன்பாடு இல்லாமல் சில ஆண்டுகளாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.