கரூர் மாவட்டம், கட்டிப்பாளையம் புகழூர் வாய்க்கால் பாலத்தில் இருந்து திருக்காடுதுறை செல்லும் புகழூர் வாய்க்கால் கரைவழியாக செல்லும் தார் சாலை ஓரத்தில் பெரிய கிணறு ஒன்று உள்ளது. இதனால் தார் சாலையின் ஓரத்தில் உள்ள கிணற்றில் தார் சாலை சிறிது சிறிதாக விழுந்து வருகிறது. இதனால் தார் சாலையின் அகலம் குறைந்து வருகிறது. தார் சாலை ஓரத்தில் கிணறு இருப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் கிணறு இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.