கோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையோரத்தில் கேர்பெட்டா வரை கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கபடுகின்றன. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வருகிறது. எனவே சாலையோரம் போக்குவரத்துக்கும், பொதுமக்கள் நடந்து செல்லவும் இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.