நாய்கள் தொல்லை

Update: 2022-09-07 14:03 GMT


மயிலாடுதுறை கூறைநாடு பூக்கடை தெரு அண்ணாசிலை பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தனியாக செல்லும் சிறுவர்களை விரட்டிசென்று கடித்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்