திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பி.கே.அகரம் அரிஜனதெருவில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் 200 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தற்காலிகமாக இந்த கடை மகளிர் சுய உதவி குழு இயங்கி வந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் எண்ணெய் பாக்கெட்டுகள், பருப்பு, அரிசி உள்ளிட்ட மூட்டைகள் எலிகளால் கடித்து குதறப்பட்டு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் இந்த ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் ஒரே தவணையாக இல்லாமல் 3 தவணையாக வருவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.