நடவடிக்கை ேதவை

Update: 2022-09-06 14:25 GMT

திப்பிறமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் முடவக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு கருங்கலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் இருந்தும் ஒரு பாதை இருந்தது. தற்போது அந்த பாதை அடைக்கப்பட்டு அங்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் குளத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் மீண்டும் பாதை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளிதாசன், திப்பிறமலை

மேலும் செய்திகள்