மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2022-09-06 11:56 GMT

மயிலாடுதுறை நகர் பகுதிகளில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக மழைக்காலங்களில் முக்கிய சாலை, கடைவீதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் வடிவதற்கு வழியின்றி தேங்கி கிடப்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை நகர் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்