கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்

Update: 2022-09-02 14:25 GMT

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இந்த கால்வாய் வழியாக விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்கிறது. அதேபோல் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரும் இந்த கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து உபரி நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரும் செல்ல முடியாமல் ஊருக்குள் உள்ள வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்