மயிலாடுதுறை மாவட்ட நகர் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கின்றன. மேலும், சாக்கடை கால்வாயில் மழை தண்ணீர் தேங்கி கொசு அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மாணவ-மாணவிகள் இரவில் படிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயிலாடுதுறை நகர் பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?