மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீர், குப்பை மேடுகளில் சுற்றித்திரிந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?