அரியலூர் காமராஜர் திடலை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நுழைவாயிலில் கேட்டு வசதி அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதும், மர்மநபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காமராஜர் திடலின் நுழைவு வாயிலில் கேட் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.