பாலாற்றில் குப்பைகளை எரிக்கும் அவலம்

Update: 2023-03-12 13:29 GMT



வேலூர் பாலாற்றில் மர்ம நபர்கள் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை கொட்டி தீ வைத்து எரித்து வருகின்றனர். வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பாலத்தின் கீழ் பகுதியில் மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்து பாலத்தில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலாற்றில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்