குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2024-07-14 12:54 GMT

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் செல்லும் கொள்ளிடம் வடகரை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைப்பதினால் அதிக அளவில் புகை ஏற்பட்டு இப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்