குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2024-06-30 11:37 GMT

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கருமலை மாங்கனாபட்டி சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த குப்பைகளில் மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்துவதினால் இப்பகுதியில் அதிக அளவில் புகை ஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் முதியவர்கள் மூச்சு விட முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்