குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2024-01-28 11:41 GMT

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வேலாயுத பாண்டியன் தெருவிற்குட்பட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களில் சிறு சிறு சந்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் குப்பை எடுக்கும் வாகனங்கள் இந்த பகுதிகளுக்கு வருவதில்லை. மேலும், குப்பை தொட்டிகளும் இல்லாததால் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டிவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்