குப்பை குவியல்

Update: 2023-11-05 13:36 GMT

சென்னை, ஐயப்பன்தாங்கல், பெரிய கொளத்துவாஞ்சேரி, ஈ.வி.பி. பிரபு அவென்யூ, 3-வது மெயின் ரோட்டில் குப்பைகள் குவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கொசு உற்பத்தி ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்