செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், மேற்கு அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பகைள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. மேலும், கழிவுநீர் குப்பைகளுடன் தேங்கி நிற்கிறது. இதனால், நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிக அளவு தூர்நாற்றம் வீசுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
