குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-15 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்ச்சி செல்வராஜ் நகர் ரோடு 3-வது தெரு மற்றும் 4-வது தெரு சந்திக்கும் இடத்தில் பல மாதங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்துள்ளது. இதில் மழை பெய்து மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு , மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்