ஆற்றங்கரையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2023-10-08 11:30 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையத்தின் பின் பகுதியில் முடிகொண்டான் ஆற்றங்கரை உள்ளது. இந்த ஆற்றங்கரையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும்,குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆற்றங்கரையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்