குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-09-24 11:22 GMT

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வடகரை ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்