சுகாதாரகேடு

Update: 2023-07-12 09:16 GMT

சேலம் வடக்கு பொன்னம்மாபேட்டை   34  -வது வார்டு கார்பெட் தெரு பகுதியில் சாக்கடை வசதி, சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்