அகற்றப்பட்டது

Update: 2022-09-29 14:12 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அண்ணாவிகுளம் உள்ளது. இந்த குளத்தின் மறுகால் பாயும் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடந்தது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-ராமதாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்