குப்பைகளுக்கு தீ வைப்பது தவிர்க்கப்படுமா?

Update: 2023-07-09 13:07 GMT

வாலாஜா நகராட்சி 16-வது வார்டு பகுதியில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பின்பக்க பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கும் அவலம் நடந்து வருகிறது. அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் மாணவிகளுக்கும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கும் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று கொட்ட வேண்டும். குப்பைகளுக்கு தீ வைப்பதை தவிர்க்க வேண்டும்.

-கு.எழில்அரசன், வாலாஜா. 

மேலும் செய்திகள்