சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-07-05 12:53 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாந்தாபுரத்தில் இருந்து பிராட்டியூர் செல்லும் மங்கம்மாள் சாலையில் இருபுறமும் அதிக அளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளில் கோழி கழிவுகள் மற்றும் மங்கும், மங்காத குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இந்த சாலை வழியாக பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் ஒரு வித துர்நாற்றத்தை கடந்து சென்று வருகின்றனர். மேலும் ஆங்காங்கே அந்த குப்பைகளை அந்த வழியாக செல்வோர் தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதனால் கரும்புகை ஏற்பட்டு அந்த சாலையை கடந்து செல்பவர்களுக்கு பலவித தொற்று நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்