சுகாதார சீர்கேடு

Update: 2022-12-14 07:43 GMT

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வடுகன்பற்று கிராமம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையோரம் சிலர் அதிகாலையில் ரசாயன கழிவுகளை கொட்டி தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, சாலையோரத்தில் ரசாயன கழிவுகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்