சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-18 12:17 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியம், மதுராபுரி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகள், இறைச்சி கழிவுகள் ஆகியவை புறவழிச்சாலை முழுவதும் மலை போல் குவிந்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குப்பைகளை கிடக்கும் உணவுகளை திண்பதற்காக நாய்கள், பன்றிகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்