சிவகங்கை மாவட்டத்தின் நகர் பகுதிகளில் சில இடங்களில் சாலையோரத்தில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகர் பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.