ரசாயன குப்பைகள் எரிப்பு

Update: 2022-07-28 10:38 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் புக்கத்துறை ஊராட்சியில் சமத்துவபுரம் கிராமத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரசாயனம் கலந்த குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இவற்றை தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகையால் கிராமத்தில் நோய்தொற்று மற்றும் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்