குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-20 13:21 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நெய்குப்பி ஊராட்சி நரசன்குப்பத்தில் ஏரியின் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் குப்பைகளுடன் மழைநீர் கலந்து கழிவுநீராக மாறி ஏரியில் கலக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இது பற்றி புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்