சென்னை வியாசர்பாடி, சர்மா நகர், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையை ஒட்டி மாநகராட்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே குப்பைகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், பள்ளி மாணவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி அதிகாரிகள் குப்பை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.