ஆற்றுக்குள் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-09-03 10:27 GMT

நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் பின்புறம் உள்ள முடிகொண்டான் ஆற்றுக்குள் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் ஆற்றுநீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது. மேலும், ஆற்றங்கரையோரத்திலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிகொண்டான் ஆற்றுக்குள் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்