சுகாதார சீர்கேடு

Update: 2023-08-27 08:28 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளை பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலைய பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி குப்பைகளை முறையாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகம்மது ரபீக், திட்டுவிளை.

மேலும் செய்திகள்