காலை நேரத்தில் வராத குப்பை வண்டிகள்

Update: 2023-08-09 12:08 GMT

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் 37-வது வார்டு அம்மாகுளம் பகுதியில் குப்பை வாங்கும் வண்டி முன்பு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் குப்பைகளை வாங்கி சென்று விடுவார்கள். தற்போது 12 மணிக்கு மேல் குப்பைகளை வாங்க வருவதினால், வேலைக்கு செல்பவர்கள் தங்களின் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை குப்பை வண்டியில் கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வழக்கம்போல் காலை நேரத்தில் குப்பை வண்டி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்