மலைபோல் குவியும் குப்பைகள்

Update: 2023-07-23 13:51 GMT

அரியலூர் நகரில் நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் தற்போது முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. முன்பு சமுதாய கூடம் இருந்த இடத்தில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக அங்கே கொட்டி வந்தனர். தற்போது சமுதாயக்கூடம் முழுமையாக இடிக்கப்பட்டு விட்டது. பஸ் நிலையத்தின் உள்ளே அம்மா உணவகம், ஆதரவற்றோர் இல்லம் மட்டும் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு முன்பு குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. ஆடி மாத காற்றில் இங்கு கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றி பறந்து வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்